ஒருதலைக் காதல் – மாணவி வெட்டிக் கொலை!

தென் இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் நேற்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.டயானா என்ற மாணவியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவராக கருதப்படும்  சந்தேகநபரான 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!