கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு கொலை : இருவர் கைது

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!