சங்கானை பிரதேச செயலகம் மீது மக்கள் அதிருப்தி!

யாழ். சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடத்திவருவதால்  தாம் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்” பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளதால் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனால் பொது மக்கள் சேவையைப் பெறமுடியால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே இவ்வாறன போட்டிகளை மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தில் நடத்தாது, அலுவலக நேரம் முடிந்த பின்னர், அல்லது விடுமுறை தினங்களில் நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!