கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் விவசாய அமைச்சரின் கருத்து!

ஈர வலய தரிசு வயல்களை ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி நெற்பயிர் செய்ய முடியாத காரணத்தினால் ஈர வலயத்தில் பல வயல் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

மேலும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் கைவிடப்பட்ட காணிகளை ஏனைய பயிர்களுக்கும் கால்நடை வளர்ப்பிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் விவசாய அபிவிருத்தி நிலையத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து, பயிர்ச்செய்கைக்கு தேவையான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!