காதலர் தினத்தன்று 2 மில்லியன் ரோஜா விற்பனை : ஹோட்டல்களும் முன்பதிவு!

காதலர் தினமான நேற்று (14) இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட (2023) இந்த ஆண்டு ரோஜாக்களின் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நேற்று முன் தினம் (13) மாலை முதல் பூ விற்பனை நிலையங்களில் சிவப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை அதிகமானோர் கொள்வனவு செய்துள்ளனர்.

பூக்கடைகளில் ஒரு ரோஜா ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கொத்து ரோஜா 3,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் ரோஜா விற்பனை மூலம் பூ வியாபாரிகளுக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜாக்கள், கொத்து மலர்கள் தவிர, உருவாக்கப்பட்ட ‘டெடி பியர்’களை அதிகமானோர் வாங்கியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ‘டெடி பியர்’ ஒன்று, 500 முதல் 1,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காதலர் தினத்தன்று, நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய ஹோட்டல்களில் பல அறைகளை காதலர்கள் முன்பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!