சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள்!

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில்  இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக  கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்டுள்ள குறித்த படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!