இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள்!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) இடம்பெறவுள்ளது.

இதேநேரம்  இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் பூதவுடல் புத்தளம் ஆராய்ச்சிக்கட்டுவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி அனுராத ஜயக்கொடியின் உடல் நேற்று கண்டியில் தகனம் செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!