வெடுக்குநாறிமலைக்கு பௌத்த தேரர் தலமையிலான குழு திடீர் விஜயம்!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததுடன், இது தங்களது இடம் என பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!