மத்திய மலைநாட்டில் தொடரும் வறட்சி : நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு!

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

மலையக பகுதிகளில் தொடரும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட எட்டு அடி குறைந்து உள்ளதாக நீர்மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டும் வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வாறு வெப்பமான வானிலை தொடரும் பட்சத்தில் மலையகப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மலையக பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!