ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

சுற்றாடல்துறை அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுற்றாடல் அமைச்சராகச் செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்தே சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் எம்.எஸ்.பி ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!