76 கோடி ரூபா மோசடி-இலங்கை வர்த்தகர் கைது!

நாட்டில் சுமார் 76 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கபடுகின்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கோடிக்கணக்கான பெறுமதியுடைய மாணிக்கக் கற்களை மோசடி செய்துள்ளதாகவும் இதன் பின்னர், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தகரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவில் கைது செய்துள்ளது.

அவருக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சந்தேகநபர், நாட்டு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!