சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி பெரும்பாலோர் இந்தியர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 399 எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்யாவில் இருந்து 31 ஆயிரத்து 159 பேரும் பிரித்தானியாவில் இருந்து 16 ஆயிரத்து 665 பேரும்,  நாட்டிற்கு  வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!