சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட படகு மீட்பு!

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

கப்பல் மற்றும் அதன் ஆறு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலாபத்திலிருந்து ஆறு பணியாளர்களுடன் கடந்த 12ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்திச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியதை அடுத்து கடத்தப்பட்ட மீனவர்களை விடுவிக்க சோமாலிய அரசின் உதவி நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!