10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – இளைஞன் கைது!

கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய இளைஞராவார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் வழிபாட்டுக்காக விகாரைக்கு சென்றுள்ளார்.

அவ்வேளை சந்தேக நபர் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிறுமியிடம் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சத்தமிட்டுக்கொண்டு தனது தாயிடம் சென்றபோது, சந்தேக நபர் வேனொன்றில் ஏறி தப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படும் கையடக்கத் தொலைபேசியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!