அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்துள்ளார்.

குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் நேற்று காலையும் அவர் வழமை போல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும் விசாரணைகளின் போது தெரிவித்திருக்கிறார். பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால்பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!