தொடரும் யுக்திய நடவடிக்கை – 871 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கைது செய்யப்பட்ட 871 பேரில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 626 பேரும், குற்றப்புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 245 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 14 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!