கொள்ளை பற்றி முறையிட்டவர் மீது நெல்லியடியில் வாள் வெட்டு!

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து சிலர் அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்தீபன் (30)  எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று (25) மாலை  ஐஸ்கிறீம் விற்பனையில்  ஈடுபட்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ் கிறீம் வாங்குவது போல நடித்து  இளைஞனிடமிருந்த  பணம் , மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர்  வீடு  திரும்பிக் கொண்டிருந்த போது, அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த சிலர் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!