இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்திய 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளின் பின்னர் அவர்களைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!