யாழ்ப்பாணத்தில் எஸ்.பி.ஐ வங்கிக் கிளை திறப்பு!

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எஸ்.பி.ஐ வங்கிக் கிளையை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகத்த பூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய நிதித்துறை அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்ரேட் வங்கிக் கிளையை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் நாடா வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வங்கியின் பெயர்ப் பலகையை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வங்கியின் புதிய வாடிக்கையாளர் மூவருக்கு கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிழ்வில் வடக்கு மாகண பி.எஸ்.எம் சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!