நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்த சமுத்திரதேவா படகில் இருந்த பயணிகள் அனைவரும் மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாகக் கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது. இதனால் பயணிகள் கடலில் அந்தரித்தனர். நெடுந்தீவுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.
இதனையடுத்து, அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் உதவியுடன், படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இதனால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.