மன்னார்- யாழ்ப்பாணம்: அரச பேரூந்தின் அவல நிலை

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும்  அரச பேருந்துகள்  மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக  பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக அப்பேருந்துகள்  பாவனைக்கு அற்ற விதத்தில் காணப்படுவதாகவும், பயணத்தின்போது இடை நடுவில் பழுதடைந்து விடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு தாம் முகம் கொடுத்து வருவதாகவும்  பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தினாலும் அவர்கள் எந்த நடவடிக்கையினையும் இதுவரை எடுக்கவில்லை எனவும்  பொதுமக்கள்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!