வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்குக் கண்டணத்தை வெளிப்படுத்துமுகமாக நல்லூரில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே”, “ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்?” , “சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய்”, “சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும்” போன்ற வாசகங்களைத் தாங்கியிருந்தனர்.
இந்து மற்றும் கிருஸ்தவ மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.