சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று 5 ஆம் திகதி மாலை காணாமல் போயுள்ளனர்.
10 பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதுடன், ஒருவர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு சுற்றுலா சென்றவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
பொலிஸார், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைத்து காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.
