பொலிஸ் ஜீப் தடம் புரண்டு விபத்து

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் இன்று 30ஆம் திகதி காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த பொலிஸ் ஜீப்  வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை விட்டு விலகி விபத்து ஏற்படடுள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணையினை முன்னெடுத்துள்ளதோடு, ஜீப்பையும் மீட்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகனம் செலுத்துவோர் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!