குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தை மூடுவதற்குத் தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே தாக்குதலை நாடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தக நிலையத்தின் மீது வெற்று பியர் போத்தல் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் உரிமையாளரை வாளால் வெட்டி விட்டு வர்த்தக நிலையத்தையும் அடித்து நொருக்கியுள்ளனர். அதன் அபி ன்னர் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம் ரூபா பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் , தடயவியல் நிபுணர்கள் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

