மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் நீர்த்தாரைப் பிரயோகம்!

மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

அதன்படி இன்று கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

குறித்த போராட்டமானது நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவ நிறுவக (NSBM) மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழுவினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதனால் கொழும்பு 07 ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தையின் ஒரு பாதை, மருத்துவ மாணவர்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக வாகன போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!