சீனாவில் இடிந்து விழுந்த வீதி – பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கனமழை காரணமாக நெஞ்சாலை சரிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
குறித்த சம்பவம் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் டபு கவுண்டியில் உள்ள மீஜோ-டாபு விரைவுச் சாலையில் இடம்பெற்றுள்ளது.
 
மே தின விடுமுறைக்காக நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த சாலையூடாக பயணம் செய்துள்ள நிலையில் நேற்றைய தினம் அதிகாலை 2:10 மணியளவில் Meizhou-Dabu எக்ஸ்பிரஸ்வேயில் இடம்பெற்றுள்ளது.
 
இவ்வாறு இடிந்து விழுந்த பகுதி 17.9 மீட்டர் நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. அதில் 23 வாகனங்கள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!