யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி முதியவர் பரிதாப மரணம்..! இளைஞனுக்கு விளக்கமறியல்…!

யாழ். கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர் புதிய செம்மணி வீதி ஊடாக கடக்க முற்பட்ட நிலையில் சைக்கிளில் வந்த நபருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் சைக்கிள் பயணித்த நல்லூரை சேர்ந்த க.மோகனகுமார் (வயது 61) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!