அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 45 லிட்டர் கசிப்புடன் சந்தேக நபர் இருவரை கைது செய்ய முற்பட்ட போது  ஒருவர் தப்பிச் செற்றுள்ளார்.  பொலிசார் அவரை துரத்தி  பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் கசிப்பினை பொதி செய்து எடுத்துச்  சென்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்  கசிப்பை விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!