தையிட்டியில் தமிழர்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி இன்று மாலை ஆரம்பமான போராட்டம் தற்போது நள்ளிரவைத் தாண்டியும் தொடருகின்றது. இப் போராட்டமானது நாளை மாலை வரை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் பௌத்தர்கள் யாரும் வசிக்காத நிலையில், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் தென்னிலங்கயைிலிருந்து இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டு இவ்விகாரையில் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கெதிரான போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றது.
