மின்சாரம் தொடர்பில் புதிய சட்டம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சபை சட்டமூலத்தில் காணப்பட்ட சில குறைபாடுகளை மையப்படுத்தி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சட்டமூலம் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தன.

இருப்பினும், வெளியிடப்பட்ட சட்டமூலத்தின் சிங்கள மொழி பிரதியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அமைச்சரவை அண்மையில் அதற்கு அனுமதி வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!