திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலிகம பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு(14) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சன்ஜீவ கருணாரட்ண வயது (41) என தெரியவருகின்றது.
சேருநுவர -மஹாவலிகம பகுதியில் உள்ள வீதியில் வைத்து இனந்தெரியாத நபரினால் இவ் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதற்காக இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லையென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர் .
தனிப்பட்ட குரோதத்தால் இவ் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் நேற்றிரவு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இன்று(14) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.