வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது விழுந்த மரம்- சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி..!!

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு (05)  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றினை சட்ட விரோதமாக வெற்றி கொண்டிருந்த வேளையில் திடீரென மரம் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்தமையால் குறித்த விபத்துச் சம்பவம்  நேர்ந்துள்ளது.

குறித்த மரத்தினை வெட்டியது யார் என்று தெரியாத நிலையில் சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த  விபத்தினால் சற்று நேரம் இவ் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!