இரத்தினபுரியில் வாகன விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி – பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேனில் இரண்டு சிறு குழந்தைகளும் பயணித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பிரதேசவாசிகள் தலையிட்டு காயமடைந்தவர்களை இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்,

லொறியின் சாரதி இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!