தெஹிவளை மேம்பாலத்தில் தீ விபத்து; முற்றாக எரிந்த சொகுசுக்கார்..!

தெஹிவளை மேம்பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சொகுசுக் கார் ஒன்று முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது.

தெஹிவளை சந்தி, காலி வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றியுள்ளது.

அதனையடுத்து காரின் சாரதி உடனடியாக செயற்பட்டு காரை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து தெஹிவளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

எனினும் கார் எரிந்து சேதமடைந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாகவே குறித்த கார் தீப்பற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!