பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய நால்வர் கைது!

சந்தேகத்திற்கிடமான இரண்டு முச்சக்கரவண்டிகளை சோதனையிடச் சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு  தப்பி செல்ல தயாராக இருந்த நால்வர் வாள்கள் மற்றும் தடிகளுடன் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குற்றச் செயல்களில் ஈடுபடச் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளை சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 19, 27, 28 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி அளுத்கம தர்கா நகரில் 6 சந்தேகநபர்கள் வந்த இரு முச்சக்கர வண்டிகளை சோதனையிடுவதற்கு தயாரான போது இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!