தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!

தாய்லாந்தில் இருந்து 846 பயணி கள் மற்றும் 469 பணியாளர்களுடன் அதி சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வைக்கிங் ஸ்கின் என்ற சொகுசு கப்பல் ஒன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பயணிகள் காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!