2,863 கோடி ரூபாயை திறைசேரிக்கு செலுத்தத் தவறிய நெல் சந்தைப்படுத்தல் சபை

நெல் சந்தைப்படுத்தல் சபையானது, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்தத் தவறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல் கொள்வனவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”பன்னிரண்டு ஆண்டுகளில், கருவூலத்தில் பணம் இங்கே இருக்கும்.அமைச்சர் மஹிந்த அமரவீரவின் காலத்தில் இது நடக்கவில்லை. இங்கு திறைசேரி நேரடியாக வழங்கிய பணமும், மக்கள் வங்கிக்கு உத்தரவாதமாக இலங்கை வங்கி வழங்கிய பணமும் அதில் உள்ளடங்கியுள்ளது.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை கடந்த சில வருடங்களாக கொள்கை மாற்றங்களுடன் ஒப்பிடுகையில்
விவசாயத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கபட்டனர்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமையினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை வழங்கமுடியாமல் போனது. ஆனால் தற்போது விவசாயிகளுக்கான சலுகைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதியும் விவசாய அமைச்சரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். நெல் கொள்வனவு விவகாரத்தில் நிதி அமைச்சு அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!