வெடுக்குநாறிமலை அராஜகத்தை கண்டித்து வவுனியாவில் போராட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்  நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான  குறித்த போராட்டமானது த ஊர்வலமாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்றுள்ளது.

இதேவேளை குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக  நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் , சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம் ஆகியோரும்  போராட்டத்தில் பங்குபற்றியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!