வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான குறித்த போராட்டமானது த ஊர்வலமாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்றுள்ளது.
இதேவேளை குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் , சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம் ஆகியோரும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.