ஒட்டுசுட்டானில் தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று பிற்பகல் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது மாங்குளம் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பாரவூர்தி சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காது சமிக்ஞையை மீறி பயணித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கற்சிலைமடு பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பாரவூர்தியில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!