துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் சிலர் கொக்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். இதன்போது, ஒருவர் கொண்டுச் சென்ற துப்பாக்கி திடீரென வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை செம்மன் ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரும் அவரது நண்பனான 52 வயதுடைய ஆசிரியர் ஒருவரும் அரச அனுமதி பெற்ற சொட்கண் வகை துப்பாகியுடன் குறித்த பிரதேசத்தில் கொக்குகளை சுட்டு வேடையாட சென்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!