யாழுக்கு வருகை தந்த சவேந்திர சில்வா!

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்றுவரும்  “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புப்  பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு உயர் மட்ட குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய குறித்த கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!