தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக  முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் விசேட   கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, அமைச்சர் மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் லசந்தஅழகியவண்ண, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுரபிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முன்னதாக 5 கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!