தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டி: வவுனியா மாணவிகள் சாதனை!

2024ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற குறித்த பளுதூக்கும் போட்டியானது கடந்த  23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்  பதக்கத்தையும், ஒரு வெண்கலப்  பதக்கத்தையும் வென்று தமது பாடசாலைக்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!