டின் இலக்கம் தொடர்பான புதிய அறிவிப்பு

தனிநபர் வரிக்கோவைக்கான டின் இலக்கத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் மற்றும் அதே இலக்கத்தையே டின் இலக்கமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை பரிந்துரைக்கும் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பிரேரணை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்காக 6 நிறுவனங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் இதுவரை 4 நிறுவனங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை விடவும் மேலதிகமாக இரண்டு நிறுவனங்களின் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!