உணவு விநியோகத்தை நிறுத்த முடிவு

வடக்கு காஸா பகுதிக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது.

உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகளை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு காஸாவிற்கு உணவு எடுத்துச் சென்ற வாகனத் தொடரணி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது.

மேலும், உணவு ஏற்றிச் சென்ற மேலும் பல லொறிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சாரதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!