இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்…!

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், சித்திரை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 50,537 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாகஇந்தியா, பிரித்தானியா , ரஷ்யா, ஜெர்மனியைச்  சேர்ந்தவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இவ்வருடத்தில் ஆறு இலட்சத்து 86,321 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!