பொரளையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்வத்தில் ஒருவர் காயமடைந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதுடன் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை காயமடைந்தவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!