தமிழரசு கட்சியின் தலைவருக்கு கனேடிய தூதுவர் வாழ்த்து

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!