வீட்டின் சுவர் இடிந்துவீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் தாய் உயிரிழப்பு! விழுந்ததில் இளம் தாய் உயிரிழப்பு!

ஹிகுரக்கொட – மின்னேரிய பிரதேசத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்  23 வயதான தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த விபத்தில் கணவரும், ஒன்றரை வயது குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிகுரகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!